Tuesday, October 24, 2006

தொலைக்காதே உன்னை



யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை

சிலர்தான்
கிளறிக் கிளறி
கிளர்ந்தெழுகிறார்கள்

சிலரோ
உருகி உருகி
அழுது வடிக்கிறார்கள்

இன்னும் சிலரோ
பொருமிப் பொருமி
போரிடத் துணிகிறார்கள்

பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு

யாரும் ஏதும் சொல்வார்களேயென்று
நாணிக் கோணி வீணே நிற்காதே

திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்

தொலைக்காதே உன்னை
தொலைத்து விடு உன்
மனதைக் கலைப்பவரை

தொலைத்து விடு
பெண்ணென்று விழிப்பவர்களை
பூவென்று நுகர்பவர்களை
கண்ணென்று கதை பேசுபவர்களை
இன்னும் சொல்லி ஏய்ப்பவர்களை...

மார்ச் - 2000

8 comments:

ரசிகன் said...

// யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை//

மிக யதார்த்தமான உண்மை..
நல்லாயிருக்கு..

// "தொலைக்காதே உன்னை"//

தலைப்புங்கூட அருமை..

தினேஷ் said...

பெண்மையை போற்றும் கவிதை...
அருமை பெறுமை

தினேஷ்

Unknown said...

All kavithai also verry good,
Pls fwd., the all kavithai.
My mail ID: a.silambarasan@googlemail.cim

Thanks,
a.silambu

தமிழ் மதுரம் said...

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம் என்பதை மீண்டுமொரு தரம் நினைவு படுத்துகிறது இந்தக் கவிதை... நம்பிக்கை கவிதையில் அறிவுரை கூறுவதனூடாகத் துளிர்க்கிறது.... தொடருங்கள்///

Muruganandan M.K. said...

"பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு" ...
"
திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்"

இனிய கருத்தச் செறிந்த வரிகள்.
புதுவருட வாழ்த்துக்கள்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சிவகுமாரன் said...

பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா - என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன

Chandravathanaa said...

நன்றி ரசிகன்!
நன்றி மெல்போர்ன் கமல்!
நன்றி சிலம்பரசன்!
நன்றி தினேஷ்!
நன்றி டொக்டர்!
நன்றி சிவகுமாரன்!