Wednesday, October 04, 2006

மனநோயாளி



நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி..!

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்...
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு... நான்

அவை
வெடித்துச் சிதறி...
"மனநோயாளி" என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா..?
நடிப்புடனா..?

சந்திரவதனா
ஜேர்மனி
24.3.2002

http://www.selvakumaran.de/index2/kavithai/mananoyali.html

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At Wednesday, October 04, 2006 8:08:00 AM, Blogger கார்மேகராஜா said...

நல்லா இருக்கு.

 
At Wednesday, October 04, 2006 8:12:00 AM, Blogger கார்மேகராஜா said...

எப்படி இத்தனை பதிவுகளை கையாள்கிறீர்கள்? உங்கள் திறமை இதிலேயே தெரிகிறது.

 
At Wednesday, October 04, 2006 10:19:00 AM, Blogger Chandravathanaa said...

கார்மேகராஜா
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

 
At Tuesday, May 20, 2008 11:21:00 AM, Blogger தினேஷ் said...

அருமை... அருமை...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home